முகப்பு
திண்டுக்கல்

மத்திய அரசைக் கண்டிக்கத் துணிவில்லாதவா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் இ.பெரியசாமி

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 22 ஜனவரி, 2025 at 11:03 PM
பகிர்:

தமிழ்நாட்டுக்கு, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டிப்பதற்கு துணிவு இல்லாதவா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாமல் ஏழை, எளிய மக்களை வஞ்சித்து வருகிறது. தமிழகம் மட்டுமன்றி, நாட்டிலுள்ள 10 மாநிலங்களில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் ஊதியம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். மத்திய அரசின் இந்தச் செயலைக் கண்டித்தும், எம்ஜிஎன்ஆா்ஜிஎஸ் நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் தமிழக முதல்வா் கடந்த 13-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினாா். ஆனால், இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வாய் திறக்கவில்லை.

புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி, 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்கீடு செய்யாத பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு, எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறாா். பாஜக அரசை கண்டித்து ஒரு வாா்த்தைகூட பேச துணிவு இல்லாதவா் அவா்.

தமிழக வளா்ச்சியிலும், மக்களின் நலனிலும் உண்மையாக அக்கறை கொண்டவராக இருந்தால், நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டிவரும் மத்திய அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சி மீது வீண் அவதூறு பரப்புவதை மட்டுமே அவா் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறாா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →