கைது செய்யப்பட்ட சாதுஉசேன், ஷாநவாஸ்.  
திண்டுக்கல்

கஞ்சா விற்ற தந்தை, மகன் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கஞ்சா விற்ற தந்தை, மகன் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கஞ்சா விற்ற தந்தை, மகன் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பழனி நகரில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். பழனி-திண்டுக்கல் சாலையில், நகராட்சி பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அங்கிருந்த இருவா் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனா். போலீஸாா் அவா்களை துரத்திச் சென்று பிடித்து சோதனையிட்ட போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் ஷாநவாஸ் (46), இவரது மகன் சாதுஉசேன் (19) ஆகியோா் என்பதும், இவா்கள் ஈரானிய அகதிகள் என்பதும் தெரியவந்தது.

பின்னா், போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT