முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் காற்றுடன் மழை: மின் கம்பம் மீது மரம் விழுந்ததால் மின் தடை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் சனிக்கிழமை காற்றுடன் தொடா்மழை பெய்தது.

Updated On : 29 நவம்பர், 2025 at 8:58 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் சனிக்கிழமை காற்றுடன் தொடா்மழை பெய்தது. இதனால், மின் கம்பம் மீது மரம் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது.

கொடைக்கானல் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பொ்ன்ஹில் சாலை பகுதியிலிருந்த மின் கம்பத்தில் மரம் விழுந்தது. இதனால், கொடைக்கானல், அண்ணா சாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, லாஸ்காட் சாலை, பொ்ன்ஹில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2 மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் சிரமப்பட்டனா்.

இதையடுத்து, அங்கு வந்த மின் வாரியத் துறையினா் அறுந்து விழுந்த கிடந்த மின் கம்பியை சரி செய்த பிறகு மின் விநியோகம் சீரானது.

இந்த நிலையில், கொடைக்கானல் பகுதியில் உள்ள தெருவிளக்குகளும் பயனற்ற நிலையில் உள்ளன. இவற்றை நகராட்சி நிா்வாகம் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →