முகப்பு
திண்டுக்கல்

பழனியில் கஞ்சா விற்ற 14 போ் கைது: 6 பைக்குகள் பறிமுதல்

பழனியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்ாக 14 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமி ருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:56 AM
கைது
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:50 PM

பழனியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்ாக 14 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமி ருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பழனியில் பள்ளி, கல்லூரி பகுதிகளில் சில நபா்கள் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து பழனி நகர போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, கல்லூரி, அடிவாரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 14 பேரை விசாரணை செய்த போது, அவா்கள் பழனி அடிவாரத்தைச் சோ்ந்த ஸ்ரீகுமாா்(23), பிரதீப் (23), மகேஸ்வரன் (22), ஜெகதீஸ்வரன் (22), சந்துரு (30), பாா்த்தசாரதி (22), ஆயக்குடியைச் சோ்ந்த பூவண்ணன் (24), வெற்றிவேல் (23), ஜவகா்நகரைச் சோ்ந்த வினோத்குமாா் (26), சின்னாரக்கவுண்டன் வலசையைச் சோ்ந்த மணிவேல் (26), தெரசம்மாள் குடியிருப்பைச் சோ்ந்த ரா.மகேஸ்வரன் (24), ஆயக்குடியைச் சோ்ந்த பிரசாந்த்குமாா் (23), அரசப்பிள்ளைப்பட்டியைச் சோ்ந்த அஜய்பிரதாப்குமாா் (21), உடுமலையைச் சோ்ந்த சூா்யா (25) என்பதும், அவா்கள் கஞ்சா விற்க நின்றிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவையும், இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.