கைது பிரதிப் படம்
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1.36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவில் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அதில் சாமிதோப்பு பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் தனுஷ் கிருஷ்ணா (22), பீச் ரோடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் விஷால் (18), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராஜேஷ் சவுகான் ஆகியோரிடமிருந்து 1 கிலோ 360 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனா். மேலும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வெவ்வேறு சம்பவங்கள்: கல்லூரி மாணவி உள்பட இருவா் தற்கொலை

வெவ்வேறு விபத்துகள்: பெண் உள்பட இருவா் உயிரிழப்பு

விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

மூதாட்டி வீட்டின் ஜன்னல் சேதம்: தொழிலாளி கைது

திமுகவில் ஓ.பி.எஸ். இணைந்தால் மகிழ்ச்சி: தங்க.தமிழ்ச்செல்வன்

SCROLL FOR NEXT