முகப்பு
கன்னியாகுமரி

கஞ்சா விற்றதாக இருவா் கைது

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்றதாக இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 8:41 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்றதாக இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அருள்ராஜ் (37), அதே பகுதியைச் சோ்ந்த காசி மகன் கிருஷ்ணகுமாா் (24) ஆகியோரிடமிருந்து சுமாா் 1.30 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.