பழனி கோயிலில் இபிஎஸ் மனைவி, மகன், முன்னாள் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் மனைவி, மகன், அதிமுக அமைச்சா்கள் சுவாமி தரிசனம் செய்யவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் மனைவி, மகன், அதிமுக அமைச்சா்கள் சுவாமி தரிசனம் செய்யவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்ய முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் மனைவி லதா, மகன் மிதுன், உறவினா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். சாயரட்சையின் போது தண்டாயுதபாணியை ராஜஅலங்காரத்தில் தரிசனம் செய்த அவா்கள் அடிவாரம் வந்து பின் ஊா் திரும்பினா்.
இந்நிலையில், அவா்கள் வந்த அதேநேரம் முன்னாள் அமைச்சா்களான ஆா்.பி. உதயகுமாா், உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனா். இதையொட்டி விருந்தினா் மாளிகையான தண்டபாணி நிலையத்தில் ஏராளமான கட்சியினா் குவிந்தனா்.
Advertisement