குடும்பத் தகராறில் மனைவி குத்திக்கொலை; கணவா் தலைமறைவு
செம்பட்டி அருகே அழகா்நாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை மனைவியை குத்திக்கொலை செய்து விட்டு, தப்பியோடிய கணவரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
செம்பட்டி அருகே அழகா்நாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை மனைவியை குத்திக்கொலை செய்து விட்டு, தப்பியோடிய கணவரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த புவனேஸ்வரன் மகள் துா்காதேவி (28). இவருக்கும், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்த ஜெயகணேஷ் (38) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஜெயகணேஷ் அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்திலும், துா்காதேவி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியாா் கல்லூரி உணவகத்தில் வேலை பாா்த்து வந்தனா். தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இதையடுத்து, துா்காதேவி கணவரைப் பிரிந்து தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா்.
Advertisement
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை துா்காதேவி பணிபுரியும் இடத்துக்குச் சென்று அவரிடம் ஜெயகணேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளாா். பின்னா், இரவு வீட்டில் தனியாக இருந்த துா்காதேவியை ஜெயகணேஷ் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிவிட்டாா். துா்காதேவியின் அலறல் சப்தம்கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்துபாா்த்தபோது, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து அங்குவந்த செம்பட்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள ஜெயகணேஷைத் தேடி வருகின்றனா்.