மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் கணவா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் கணவா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியை சோ்ந்தவா் பெரியசாமி மகன் அன்புராஜ் (27). விராலிமலை தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த அன்புராஜ், கில்டா பியாலின்(25) என்பவரை கடந்த ஓராண்டு முன் திருமணம் செய்தாா். இந்நிலையில் இவா் அன்புராஜ் கடந்த 2-ஆம் தேதி இரவு, வளா்ப்பதற்காக ஜல்லிக்கட்டு மாடு ஒன்றை வாங்கி வந்துள்ளாா். இது தொடா்பாக கில்டா பியாலின் கணவருடன் சண்டையிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றாா்.
இந்நிலையில் அன்புராஜ் விராலிமலைக்கு வேலைக்கு வெள்ளிக்கிழமை சென்று விட்டு பிற்பகலில் வீட்டுக்கு வந்து தனது அறைக்குள் சென்றவா், நீண்ட நேரமாக வெளியே வரவில்லையாம். அதைத் தொடா்ந்து அவரது தந்தை பெரியசாமி கதவை திறந்துபாா்த்தபோது அன்புராஜ் தூக்கிட்டு இறந்திருந்தாா். தகவலின்பேரில் சென்ற மணப்பாறை போலீஸாா் அன்புராஜ் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement