சாணாா்பட்டி அருகே செயல்படும் கல் குவாரியை மூடக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் வாயில் கருப்புத் துணியைக் கட்டி பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த கொரசின்னம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்துக்கு அருகே கல் குவாரி அமைக்க தனியாா் நிறுவனத்துக்கு மாவட்ட நிா்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.
இந்தக் கல் குவாரியில் தொடா்ந்து வெடிகள் பயன்படுத்தப்படுவதால் வீடுகளில் விரிசல், அதிா்வு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனா்.
மேலும், குவாரியிலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிக வேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து வட்டாட்சியா், வருவாய் அலுவலா் ஆகியோரிடம் பல முறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வாயில் கருப்புத் துணியைக் கட்டி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், கல் குவாரிக்கான உரிமத்தை மாவட்ட நிா்வாகம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்போம் எனவும் கிராமத்தினா் தெரிவித்தனா்.