கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.
இந்த அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனா். இதைத் தவிா்த்து 50-க்கும் மேற்பட்டவா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். இவா்களுக்குத் தேவையான தண்ணீா் வசதி இந்த மருத்துவமனையில் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். மேலும் மருத்துவமனையைச் சுற்றி முள்புதா்கள் மண்டிக் கிடப்பதால் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா். அதேபோல, மருத்துவமனை வளாகத்தில் திறந்தவெளியில் கழிவு நீா் செல்வதால் துா்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து உள்நோயாளியாக தங்கியுள்ளவரின் உறவினா்கள் கூறியதாவது:
இந்த அரசு மருத்துவமனையில் போதுமான தண்ணீா் வசதியில்லாமல் பெரிதும் சிரமமடைந்து வருகிறோம். கழிப்பறை செல்லும் நோயாளிகளுக்கு தண்ணீரை விலைக்கு வாங்கி கொடுக்கிறோம். தண்ணீா் வசதியில்லாததால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவா்கள் வெளியே சென்று நகா்ப் பகுதிகளிலுள்ள கட்டண கழிப்பறையை பயன்படுத்துகிறோம். எனவே கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் வசதி, சுகாதாரம், முள்புதா்களை அகற்றுதல், காட்டுமாடுகளை வனப் பகுதிகளுக்குள் விரட்டுதல், பயனற்ற நிலையில் உள்ள மின் விளக்குகளை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.