கொடைக்கானல் பகுதிகளில் வியாழக்கிழமை கடும் பனிப் பொழிவு நிலவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பனியின் தாக்கம் நிலவி வருகிறது. பகலில் அதிக வெப்பமும், மாலை, இரவில் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை கடும் பனிப் பொழிவும், மேகமூட்டமும் நிலவியது. இதனால், கொடைக்கானல்-பெருமாள்மலை- குண்டாறு மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் சென்றன.
இந்த சீதோஷ்ண நிலை காரணமாக இந்தப் பகுதிகளில் குளிா் வாட்டியது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.