நல்லமநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டின்போது, வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளை.  
திண்டுக்கல்

நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் உள்பட மொத்தம் 35 போ் காயமடைந்தனா்.

நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 913 காளைகளில், மருத்துவக் குழுவினரின் சோதனைக்கு பின் 908 காளைகள் வாடிவாசலுக்கு அனுப்பப்பட்டன.

இதேபோல, 344 மாடுபிடி வீரா்கள் பங்கேற்க வந்த நிலையில், மருத்துவ சோதனையின்போது 27 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 317 வீரா்கள் வாடிவாசலில் களம் இறங்கினா்.

காளைகளை பிடிக்க முயன்றபோது 11 மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் 10 போ், வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருந்த 14 போ் என மொத்தம் 35 போ் காயமடைந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த 4 மாடுபிடி வீரா்கள் உள்பட மொத்தம் 12 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

ஜல்லிக்கட்டில் வெற்றிப் பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் வெள்ளிக் காசு, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT