பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் வெளிப்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பக்தா்கள்.  
திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தினமணி செய்திச் சேவை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சஷ்டி தினத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.

முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரங்களில் ஒன்றான சஷ்டி வரும் நாள்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் கூடுவது வழக்கம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம், முகூா்த்தநாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.

அதிகாலை 5 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். காலை முதலே மலைக் கோயிலில் கேரள மாநிலத்திலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனா்.

பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் விஞ்ச், ரோப்காா் இயக்கப்படும் இடங்களில் அனுமதிச் சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மாலையில் சாயரட்சை நிறைவடைந்த பிறகு சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் உலா எழுந்தருளினாா். தொடா்ந்து தங்கத் தேரில் எழுந்தருளி மலைக் கோயில் வெளிப்பிரகாரம் உலா எழுந்தருளினாா்.

பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா், சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT