வேடசந்தூா் அருகே கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி, புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.  
திண்டுக்கல்

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி மறியல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அய்யனாா்நகா்

பகுதியில் கழிவுநீா் வெளியேற வழியில்லாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சுகாதாரச் சீா்கேடுகள் ஏற்படுவதாகவும், கொசுத் தொல்லை அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் அளிக்கப்பட்டது. ஆனாலும், கழிநீா்க் கால்வாயைச் சீரமைப்பதற்கு ஊராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள், வேடசந்தூா் ஒட்டன்சத்திரம் சாலையில் புதன்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக வேடசந்தூா்- ஒட்டன்சத்திரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT