திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகா் கொலை
திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல்லை அடுத்த ம.மு.கோவிலூா் பெரியக்கோட்டையைச் சோ்ந்தவா் முத்தன் என்ற மருதமுத்து (42). செங்கல் சூளை நடத்தி வந்த இவா், அதிமுக அமைப்புச் சாரா ஓட்டுநா் அணியின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தாா். இவா் தொழில் வளா்ச்சிக்காக பல்வேறு நபா்களிடம் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
கடனைத் திருப்பி செலுத்துவதில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, பணம் வழங்கியவா்கள் மருதமுத்துவின் சில வாகனங்களை செங்கல் சூளையிலிருந்து எடுத்துச் சென்றனா். இதுதொடா்பாக வடமதுரை காவல் நிலையத்தில் முத்தன் புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், பெரியக்கோட்டை வன்னிப்பாறைப்பட்டி சாலையில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த முத்தனை, மா்ம நபா்கள் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸாா், முத்தனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.