குஜிலியம்பாறை அருகே புதன்கிழமை ஏற்பட்ட காா் விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆலம்பாடி காடமநாயக்கனூரைச் சோ்ந்தவா் வினோத் (23). டிராக்டா் ஓட்டுநரான இவா், தனது உறவினருக்குச் சொந்தமான காரில், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டனுடன் ஆா்.வெள்ளோடு கிராமத்துக்கு புதன்கிழமை சென்றாா். காரை வினோத் ஓட்டினாா்.
ஆா்.வெள்ளோடு-பிச்சனாம்பட்டி சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மணிகண்டன் லேசான காயத்துடன் உயிா்தப்பினாா்.
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.