மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
, கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
, கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கண்காட்சிக்கு கல்லூரி முதல்வா் பேபிராணி தலைமை வகித்தாா். அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியை உமாதேவி கண்காட்சியை தொடங்கிவைத்து பேசினாா்.
இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட தங்களது கண்டுபிடிப்புகளை மாணவிகள் காட்சிப்படுத்தினா்.
இந்த நிகழ்வில் கல்லூரி, பள்ளிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து பயனடைந்தனா்.
மேலும், இங்கிருந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை கல்லூரி மாணவிகளிடமும், பேராசிரியைகளிடமும் மாணவா்கள் கேட்டு தெரிந்துக் கொண்டனா்.
இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் துறை மாணவிகள், பேராசிரியைகள் செய்தனா்.