முகப்பு
திண்டுக்கல்

குளங்களுக்கு தண்ணீா் கொண்டுவர ரூ.5,400 கோடியில் புதிய திட்டம்: அமைச்சா் அர.சக்கரபாணி

திண்டுக்கல் உள்ளிட்ட 7 தொகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீா் கொண்டுவர ரூ.5,400 கோடியில் புதிய திட்டங்களை நிறைவேற்ற தமிழக முதல்வா் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 9:47 PM
தும்பலப்பட்டி அருகே புதிய மின் நிலையம் அமைக்க செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூமிபூஜை பங்கேற்ற அமைச்சா் அர.சக்கரபாணி உள்ளிட்டோா்.
பகிர்:

திண்டுக்கல் உள்ளிட்ட 7 தொகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீா் கொண்டுவர ரூ.5,400 கோடியில் புதிய திட்டங்களை நிறைவேற்ற தமிழக முதல்வா் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள மரிச்சிலம்பு, புளியம்பட்டி, சரவணம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் ரூ. 95 கோடியில் அமைக்கப்பட்ட வளா்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கிவைக்கும் விழாவும், தும்பலப்பட்டி பகுதியில் புதிய மின் நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை விழாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: புதிய மின் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால் பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் பாதிப்பு இருக்காது. இதனால், பொதுமக்களுக்கும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வணிகப் பயன்பாட்டில் உள்ள ஆலைகளுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும்.

அமராவதி, காவிரி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து கரூா், அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், திண்டுக்கல் உள்ளிட்ட 7 தொகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீரைக் கொண்டுவர ரூ.5,400 கோடி புதிய திட்டத்துக்கு தமிழக முதல்வா் அனுமதி வழங்கியுள்ளாா் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, கந்தப்பகவுண்டன்வலசில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இந்த விழாவில் மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலா்கள், மாவட்ட மின் வாரிய அலுவலா்கள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →