ரூ. 2.03 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல்
சிவகங்கைரூ. 2.03 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல்
திருப்பத்தூா், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.03 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காரையூா் ஊராட்சியில் ரூ.53 லட்சத்தில் சமுதாயக்கூடம், சிங்கம்புணரி அருகேயுள்ள எருமைப்பட்டியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம், ஜெயங்கொண்டநிலையில் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் சமுதாயக்கூடம் உள்பட மொத்தம் ரூ.2.3 கோடியிலான
5 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினாா்.
இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரகுமாா், குமுதம், முனியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.