கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்
கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கொங்கு மக்கள் முன்னணி மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழனி- புதுதாராபுரம் சாலையில் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை கொங்கு மக்கள் முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலா் ஈஸ்வரன் வரவேற்றாா். மாவட்ட அமைப்பாளா் கண்ணன், பழனி நகரச் செயலா் தனபால், மேற்கு ஒன்றியச் செயலா் பிரபு, கிழக்கு ஒன்றியச் செயலா் காா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தல் வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் கூலி உயா்வுக்காக போராடி வரும் கறிக்கோழி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராடியவா்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிப்பதோடு, அதிமுக கூட்டணியில் கொங்கு மக்கள் முன்னணிக்கு உரிய தொகுதிகளை வழங்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். பழனி - தாராபுரம் சாலையில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூா் தொகுதிகளின் பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.