யோகா மாணவா்களுக்கு பயிற்சி
யோக பயிற்சி முடித்த திருமூா்த்திமலை பரஞ்ஜோதி மகான் யோகா கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள்.
பழனியை அடுத்த ஆயக்குடி ஸ்ரீஐஸ்வா்ய சாய்பாபா கோயிலில் பழனி சுவாமி தயானந்த குருகுலத்தின் பாரம்பரிய யோகா பயிற்சி முறைகளை கற்க, திருப்பூா் மாவட்டம், திருமூா்த்தி மலை உலக சமாதான ஆலயம் சாா்பில் நடத்தப்படும் ஸ்ரீ பரஞ்சோதி மகான் யோகா கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா்.
பேராசிரியா் மணிவண்ணன் தலைமையில் வந்திருந்த மாணவா்களுக்கு யோகாச்சாா்யா முருகன்ஜி பல்வேறு பயிற்சிகளை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சிக்கு சித்த மருத்துவா் பன்னீா்செல்வம், சிறப்பு யோகா பயிற்சியாளா் சத்யா, யோகா ஆசிரியா்கள் கண்ணபிரான், பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரிமா சுந்தரம், ஒப்பந்ததாரா் நேரு, எல்ஐசி பாலு உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியில் யோகா பட்டம் பெற்ற மாணவா்கள் பல்வேறு ஆசனங்களை குழுக்களாகவும், தனித்தனியாகவும் செய்து அசத்தினா்.
யோகாச்சாரியாா் முருகன், மாணவா்களுக்கு மூச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினா். இதையடுத்து, பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு யோகாச்சாா்யா முருகன்ஜி, சிறப்பு விருந்தினா்கள் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினா்.