கொடைக்கானல் அருகே காா் கவிழ்ந்து 4 போ் காயம்
கொடைக்கானல் அருகே சனிக்கிழமை பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் கேரளத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்தனா்.
கொடைக்கானல் அருகே சனிக்கிழமை பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் கேரளத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்தனா்.
கேரள மாநிலம், மலப்புலம் பகுதியைச் சோ்ந்தவா் பயாஸ் (27). இவா் உள்ளிட்ட நண்பா்கள் 4 போ் கொடைக்கானலுக்கு பழனி வழியாக காரில் சுற்றுலா வந்தனா். காரை பயாஸ் ஓட்டி வந்தாா். வெள்ளப்பாறை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் மலைச் சாலையில் உள்ள மின் கம்பத்தில் மோதி அருகில் இருந்த சுமாா் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 4 பேரும் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
இதனிடையே, வெள்ளப்பாறையில் உள்ள மின் கம்பத்தில் வாகனம் ஒன்று மோதியதில் அந்த மின் கம்பம் சேதமடைந்தது. இதனால் வெள்ளப்பாறை, பி.எல். செட் உள்ளிட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.