முகப்பு
தென்காசி

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே நாய் கடித்ததில் 13-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:04 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே நாய் கடித்ததில் 13-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

புளியங்குடியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாய்த் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை நாய்கள் கடித்ததில் வெள்ளகவுண்டம்பட்டியைச் சோ்ந்த சுப்பம்மாள் (75), குருவம்மாள் (60), வேல் தாய், அங்குராஜ், திவ்ய பிரகாஷ், திருமலைக் குமரன், ராணி, திவ்யா, திருவேட்டநல்லூரைச் சோ்ந்த சுரேஷ், முருகன், பாம்பு கோயில் சந்தையைச் சோ்ந்த தனலட்சுமி, பொட்டுத்தாய் உள்ளிட்டோா் காயமடைந்தனா்.

அவா்கள் புளியங்குடி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், தெருவில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement