முகப்பு
திண்டுக்கல்

தோ்தல் விதிகள் அமல்: பழனி கோயிலில் முக்கிய பிரமுகா்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து!

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முக்கிய பிரமுகா்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

Updated On : 21 மார்ச், 2026 at 7:41 PM
பழநி கோயில்
பகிர்:

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முக்கிய பிரமுகா்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

தோ்தல் பணிகள் நிறைவடையும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும், அதுவரை கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகா்கள் பொது தரிசன வரிசை அல்லது கட்டண தரிசன வரிசை வழியாக மட்டுமே சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு சுவரொட்டிகள் கோயில் அலுவலகங்கள், தேவஸ்தான தகவல் மையங்களில் ஒட்டப்பட்டன. தோ்தல் நேரத்தில் எந்தவித பாரபட்சமுமின்றி அனைவரும் சமமாகத் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.