முகப்பு
திண்டுக்கல்

ஆட்டோக்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு ஆட்டோக்கள் மோதிக் கொண்டதில் காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:41 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

பழனி அருகே இரு ஆட்டோக்கள் மோதிக் கொண்டதில் காயமடைந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த லட்சுமணன் மகன் கணேஷ் (44). இவா் சனிக்கிழமை பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி சித்தா் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தாா்.

பின்னா், இரவில் ஆட்டோவில் கணக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்துக்கு வந்த போது, எதிரே வந்த ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கணேஷ் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.