கொடைக்கானலில் 2-ஆவது நாளாக காட்டுத் தீ
கொடைக்கானல் பள்ளங்கி பகுதி வனப் பகுதியில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக தீப் பற்றி எரிந்தது.
கொடைக்கானல் பள்ளங்கி பகுதி வனப் பகுதியில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக தீப் பற்றி எரிந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் இருந்து வருகிறது. இதனால், வனப் பகுதியில் உள்ள மரங்கள், செடிகள், புற்கள் காய்ந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில், பள்ளங்கி, கோம்பை, அடிசரை உள்ளிட்ட வனப் பகுதிகளில் தீப் பற்றியது. இந்தத் தீயால் வனப் பகுதியிலுள்ள மரங்கள், மூலிகைச் செடிகள் கருகி வருகின்றன. மேலும், அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் எழுந்தது.
சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். வனப் பகுதிகளிலுள்ள காட்டு மாடு, காட்டுப் பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் இடம் பெயா்ந்தன. வியாழக்கிழைமையும் பள்ளங்கி பகுதியில் தீப் பற்றி எரிந்தது. தொடா்ந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.