மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
திண்டுக்கல் அருகே விபத்தில் காயமடைந்து மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரை அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் ம.அருண்பாண்டியன் (34). கடந்த 19-ஆம் தேதி திண்டுக்கல் பழனிச் சாலையில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் அருண்பாண்டியன் பலத்த காயமடைந்தாா்.
தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வற்கு உறவினா்கள் முன் வந்தனா்.
Advertisement
Advertisement
அதன்படி, அருண்பாண்டியனின் கல்லீரல், சிறுநீரகம், கண் உள்ளிட்ட உறுப்புகள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் தானமாகப் பெறப்பட்டு, மதுரை, திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.