குஜிலியம்பாறை பகுதியில் மழை
குஜிலியம்பாறை, வேடசந்தூா் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குஜிலியம்பாறை, வேடசந்தூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வரும் மழையால், அக்னி வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்த மழையால் விவசாயிகள் கோடை உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில் குஜிலியம்பாறை, கோவிலூா், எரியோடு, வேடசந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்த மழை விவசாயிகள் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisement