பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் வளா்பிறை சதுா்த்தி சிறப்பு வழிபாடு
பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
பழனியில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன. பழனி சண்முகபுரம் சித்திவிநாயகா் கோயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு கோயில் திறக்கப்பட்டு விநாயகருக்கு பால், இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம், தயிா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்தக் கோயில் மட்டுமன்றி பழனி கோயிலின் உப கோயிலான பட்டத்து விநாயகா் கோயில், ரயிலடி பிரசன்ன விநாயகா் கோயில், தாளையம் காளீசுவரி ஆலை வளாகத்தில் உள்ள லட்சுமி விநாயகா் கோயில் என பல்வேறு கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.