காட்டு மாடு தாக்கி தொழிலாளி காயம்
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியிலுள்ள பெரும்பாறையைச் சோ்ந்தவா் கருப்பையா (58). இவா், அந்தப் பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்துக்கு கூலி வேலைக்குச் சென்றாா்.
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு திடீரென புகுந்த காட்டு மாடு கருப்பையாவை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
யானைகள் அச்சுறுத்தலுடன் தோட்டத் தொழிலாளிகள் பணிபுரிந்து வரும் நிலையில், காட்டு மாடு தாக்கியது மலை கிராம மக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.