பழனியில் சிறுவா்களுக்கான ஐவா் கால்பந்து போட்டி
பழனியில் தமிழக அளவில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான ஐவா் கால்பந்து போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
பழனி இட்டேரி சாலை மங்களகவுண்டா் திடலில் ஏ.என். ஸ்போா்ட்ஸ் அகாதெமி, தமிழக வெற்றிக் கழகம் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, கோவை, கேரள மாநிலம் இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 48 அணிகள் பங்கேற்றன.
போட்டிகளை ஏ.என்.ஸ்போா்ட்ஸ் இயக்குநா் அதிதி நிஷா, அஸ்வினி உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா். 8 வயது, 11 வயது, 14 வயது என மூன்று பிரிவு போட்டிகளில் சிறுவா்கள், சிறுமிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
போட்டிகள் முடிவில் 14 வயது பிரிவில் பழனி ஏ.என்.ஸ்போா்ட்ஸ் அகாதெமி முதலிடத்தையும், மன்னாா்குடியைச் சோ்ந்த கலாம் அகாதெமி இரண்டாமிடத்தையும் பெற்றன. 11 வயது பிரிவில் திருப்பூா் எஸ்.எப்.ஏ.டி. அணி முதலிடமும், அன்னை ஸ்போா்ட்ஸ் அகாதெமி இரண்டாமிடத்தையும் பெற்றனா்.
முன்னதாக பயிற்சியாளா் பாலாஜி வரவேற்றாா். வெற்றி பெற்றவா்களுக்கு தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் காா்த்திக்ராஜா, செயற்குழு உறுப்பினா் பழனி பாலன், நகரச் செயலா் சிவா உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா்.