மதுரை

மதுரை தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைத் தேதி நீட்டிப்பு

DIN

அரசு தொழில் பயிற்சி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மதுரை புதூர் அரசினர் தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநர், முதல்வர் வி.செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:   
அரசு தொழில் பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு இட ஒதுக்கீட்டு இடங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை w​w​w.​s​k​i​l​l​t​r​a​i​n​i​n​g.​t​n.​g​o​v.​in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்ப தேதி செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) முதல் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  கால நீட்டிப்பை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் விரும்பும் தொழில் பிரிவையும், தொழில் பயிற்சி மையத்தையும் கலந்தாய்வில் பங்கேற்று தேர்வு செய்யலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT