மதுரை

ரயிலில் அடிபட்டு முதியவர் சாவு

DIN

திருப்பரங்குன்றம் அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
   திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி ரயில்வே கேட் பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
   ரயில்வே போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் ரயிலில் பயணம் செய்த நபராக இருக்கலாம் எனவும், படியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT