திருப்பரங்குன்றம் தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் முன்வரவேண்டும் என வட்டாட்சியர் சரவணப்பெருமாள் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: விவசாய நிலங்களை மேம்பாடுத்தவும், கண்மாய்களை தூர்வாரும் வகையிலும், கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளில் இதுவரை 222 விவசாயிகளுக்கு 10 ஆயிரம் லோடு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இப்பகுதியில் உள்ள பல கண்மாய்களில் விவசாயிகள் மண் எடுக்க ஆர்மில்லாமல் உள்ளனர். விவசாயத்துக்கு மிகவும் பயனுள்ள இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.