மதுரையில் புதன்கிழமை சம்மட்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக பெருநகர் அரசரடி செயற்பொறியாளர் பி.குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரசரடி உபமின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்போது மின்தடைபடும் பகுதிகள் விவரம்: சம்மட்டிபுரம் பிரதான சாலை, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்கத் தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்எம்எஸ் காலனி, டோக்நகர் 4 முதல் 16 தெருக்கள் வரை, தேனி பிரதான சாலை, விராட்டிப்பத்து சில பகுதிகள்.
மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் பகுதி, பல்லவன்நகர், முடக்குச்சாலை, வ.உ.சி.பிரதான சாலை, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக்நகர், டோக்நகர் 1 முதல் 3 தெருக்கள் வரை, கோச்சடை கிராமம்.
பழைய விளாங்குடி, புதிய விளாங்குடி, புதுச்சிறை சாலை, மேலப்பொன்னகரம் 3, 3 மற்றும் 10 தெருக்கள், மேலமாரட் வீதியில் கனரா வங்கி முதல் டவுன்ஹால் சாலை சந்திப்பு வரை, ஆர்.வி.நகர்.
ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1 முதல் 5 தெருக்கள் வரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், இஎஸ்ஐ மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்எஸ்காலனி பகுதி, வடக்குவாசல்.
அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவஹர் நகர் 1 முதல் 5 தெருக்கள், டி.எஸ்.பி.நகர் மற்றும் தினமலர் அவன்யூ, சொக்கலிங்கநகர் 1 முதல் 8 தெருக்கள் வரை, பொன்மேனி, சம்மட்டிபுரம், பாண்டியன்நகர், பைபாஸ் சாலை, பெத்தானியபுரம், பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, டெம்சிகாலனி, பாத்திமா கல்லூரி, இந்திராநகர், குட்செட் சாலை, மீனாட்சிபஜார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.