மதுரை

ரேபீஸ் தாக்கி தொழிலாளி சாவு

DIN

மதுரை அரசு மருத்துவமனையில் ரேபீஸ் தாக்கிய கூலித் தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிவேல் (45). விவசாயக் கூலித் தொழிலாளி. கடந்த 20 நாள்களுக்கு முன் தெரு நாய் பழனிவேலை கடித்துள்ளது. இதற்கு உரிய சிகிச்சை எடுக்காத நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ரேபீஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேபீஸ் வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி பழனிவேல் உயிரிழந்தார். இதையடுத்து மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்புடன் பழனிவேலின் சடலத்தை எடுத்துச் சென்று எரியூட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT