மதுரை

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 11- ஆவது நாளாக தொடர் போராட்டம்

DIN

மதுரையில் ஓய்வூதியம் வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக  ஓய்வூதியர்கள் 11-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களின் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில் பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாநிலத் துணைச் செயலர் தேவராஜ் தலைமை வகித்தார்.
மதுரை மாவட்டத் தலைவர் கே.வி.குருசாமி, விருதுநகர் மாவட்டத் தலைவர் டி.வி.சீனிவாசன், செயலர் பி.தங்கப்பழம், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வி.பி.ஆனந்தன், செயலர் பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதில் மதுரை மத்தியத் தொகுதி திமுக சட்டப் பேரவை உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசும் போது, ஓய்தியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்படும் என்றார்.  
விருதுநகர், திண்டுக்கல் போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் திரைப்பட பாடகர் கரிசல் கருணாநிதி மற்றும் குழுவினர் பங்கேற்று பாடல்கள் பாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT