அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, உண்டியல்கள் மூலம் ரூ.92 லட்சத்து 12 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது.
சித்திரைத் திருவிழாவையொட்டி அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.
இத்திருவிழாவில், பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக திருக்கோயிலின் 26 உண்டியல்களும் சுவாமியைப் பின்தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டிருந்தன.
திருவிழா முடிந்து திருக்கோயிலுக்கு சுவாமி திரும்பியதையடுத்து, வெள்ளிக்கிழமை உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், ரூ.90 லட்சத்து 42 ஆயிரத்து 651 ரொக்கம், 82 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. திருக்கோயில் நிர்வாகத்துக்குள்பட்ட தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் உண்டியலில் ரூ.1.70 லட்சம் இருந்தது.
உண்டியல்கள் என்னும் பணியில் நிர்வாக உதவி ஆணையர் க.செல்லதுரை, நிர்வாக அதிகாரி செ.மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.