மதுரை

திருவாதவூர் திருமறை நாதர் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் மே 28-இல் தொடக்கம்

DIN

மதுரை மாவட்டம் திருவாதவூர் அருள்மிகு திருமறைநாத சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உபகோயிலான, இக் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் மே 28-ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 2 ஆம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் மேலூருக்கு சுவாமி புறப்பாடாகிறார். ஜூன் 5 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஜூன் 6 ஆம் தேதி திருத்தேர் உலா உற்சவம் நடைபெறுகிறது.
 கொந்தகை பெருமாள் கோயில் திருக்கல்யாணம்: கொந்தகை அருள்மிகு தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில் திருக்கல்யாண உற்சவம் ஜூன் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து விசேஷ தீபாராதனை, தீர்த்த கோஷ்டி நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும்.
 அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் இத் தகவலைத் தெரிவித்து உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT