மதுரை

லாரி மோதி காவலாளி சாவு

DIN

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற காவாலாளி மீது லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
     மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன் (42). நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.
 இந்நிலையில், பணிமுடிந்து அதிகாலையில் தேனி-மதுரை அணுகு சாலையை கடக்க முயன்றார். 
அப்போது, அவ்வழியாக வந்த லாரி சரவணன் மீது மோதியது. இதில் பலத்த காயமைடந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 நாகமலைப் புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் ஒத்தக்கடையைச் சேர்ந்த இளையராஜா என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT