மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற காவாலாளி மீது லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன் (42). நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், பணிமுடிந்து அதிகாலையில் தேனி-மதுரை அணுகு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரி சரவணன் மீது மோதியது. இதில் பலத்த காயமைடந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாகமலைப் புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் ஒத்தக்கடையைச் சேர்ந்த இளையராஜா என்பவரைக் கைது செய்தனர்.