மதுரை

ஆமூர் சிவன் கோயிலில் சிலை பூஜை பொருள்கள் திருட்டு

DIN

திருவாதவூர் அருகேயுள்ள ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரமுடைய அம்மன் கோயிலில் உற்சவமூர்த்தி சிலை மற்றும் பூஜைபொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். 
மதுரை மாவட்டம் திருவாதவூர்-ஒத்தக்கடை சாலையில் ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரமுடைய அம்மன் கோயிலில் உள்ளது. இக்கோயில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகத்துக்குள்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இக்கோயில் பூட்டை உடைத்து,  ரூ.1 லட்சம் மதிப்புள்ள உற்சவமூர்த்தியின் பித்தளைச் சிலை மற்றும் திருவாச்சி, பூஜைப் பொருள்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 
இதுகுறித்து கோயில் அறங்காவலர் திரவியகுமார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதன்பேரில் மேலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT