மதுரை

உசிலை அருகே சாலை விபத்தில்ஆயுதப்படை காவலர் சாவு

DIN

மதுரை மாவட்டம்  உசிலம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம்  மோதியதில்  ஆயுதப்படை காவலர்  பலியானார்.
 உசிலம்பட்டியை  சேர்ந்த முருகேசன்  மகன் ராஜபாண்டி (26). அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்  மகன் தினேஷ் (25) . இவர்கள் இருவரும் சென்னை ஆயுதப்படை காவலராக 4 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றனர்.   இவர்கள் இருவரும் மதுரையில் நடைபெற்ற  உறவினர் திருமணத்திற்கு  இருசக்கர வாகனத்தில்  சென்று உசிலம்பட்டி திரும்பியுள்ளனர். 
அப்போது செக்கானூரணி அருகே கே.புளியங்குளம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் ராஜபாண்டி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்தியிலே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த தினேஷ் மதுரை அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செக்கானூரணி  போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT