மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆயுதப்படை காவலர் பலியானார்.
உசிலம்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் ராஜபாண்டி (26). அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேஷ் (25) . இவர்கள் இருவரும் சென்னை ஆயுதப்படை காவலராக 4 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் மதுரையில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று உசிலம்பட்டி திரும்பியுள்ளனர்.
அப்போது செக்கானூரணி அருகே கே.புளியங்குளம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் ராஜபாண்டி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்தியிலே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த தினேஷ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செக்கானூரணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.