மதுரை

மனைவியை  கத்தியால் குத்திய கணவர் கைது

DIN

மதுரையில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையைச் சேர்ந்தவர் அருள் பிரகாஷ் (33). இவரது மனைவி அழகு சுந்தரி (25). இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அருள் பிரகாஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
  இந்நிலையில் அழகுசுந்தரி பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்ற அருள்பிரகாஷ் அவரை வெளியே அழைத்து வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்ததை அடுத்து ஆத்திரமடைந்த அருள்பிரகாஷ் கத்தியால் அழகுசுந்தரியை குத்திவிட்டு தப்பிச்சென்றார். இதில் பலத்த காயமடைந்த அழகுசுந்தரி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக அழகுசுந்தரி அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருள்பிரஷாசை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT