மதுரை

திருமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து  10 பவுன் நகைகள் திருட்டு

DIN

திருமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை  மாவட்டம் திருமங்கலம் வடகரையைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி நாகேஸ்வரி (35). இவர் தனது மாட்டை செவ்வாய்க்கிழமை மாலை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது,  பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வளையல், தோடு, சங்கிலி உள்பட 10 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT