முகப்பு
மதுரை

பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

மதுரையில் பெண்ணிடம் 10 பவுன் நகையை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பறித்துச்சென்றதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:13 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மதுரையில் பெண்ணிடம் 10 பவுன் நகையை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பறித்துச்சென்றதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மதுரை அழகப்பன் நகர் பாலாஜி தெருவைச் சேர்ந்த சந்தானம் மனைவி முருகேஸ்வரி(55). இவர் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு சனிக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் முருகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுதொடர்பாக புகாரின்பேரில் சுப்ரமணியபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.