திருநெல்வேலி-ஜாம்நகர் விரைவு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி-ஜாம்நகர் விரைவு ரயில் (எண்.19577) திருநெல்வேலியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இதன் இணைப்பு ரயிலின் பயணம் ரத்து செய்யப்பட்டதால், ஜாம் நகர் செல்லும் ரயில் இயக்கமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.