என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிட பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்'
என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிடப் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிடப் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலர் இரா. சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் மூலம் டாக்டர் தங்கராஜ் சாலையில் என்எம்ஆர். சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப் பள்ளி, ஆதி திராவிட மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காகவும் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்கும் வசதி, உணவு, சீருடை, மருத்துவம், பாடப் புத்தகங்கள், கல்வி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது, பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் பள்ளியைத் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.