மதுரை

மேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பெ.மலைச்சாமி காலமானார்

DIN

மேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ச.பெ.மலைச்சாமி (85) , உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை  காலமானார்.
   மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சாணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் திமுக இலக்கிய அணிச் செயலராக இருந்தார். 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில்  நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்கு மனைவி பாக்கியம், மகள் எழில், மகன்கள் இளவரசு (திரைப்பட நடிகர்), சீராளன் (கொட்டாம்பட்டி ஒன்றிய திமுக நிர்வாகி), வெற்றிச்செல்வன் (செய்தி மக்கள் தொடர்புத்துறை துணை இயக்குநர்)  உள்ளனர். முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர். மற்றும் திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஆகிய தலைவர்களுடன் நெருங்கி பழகியவர். அவசர நிலை பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.   சாணிப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
 திமுக நிர்வாகிகள் பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி, தளபதி மற்றும்  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் பொதுமக்கள்  ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நல்லடக்கம் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு 9894206537.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT