மதுரை

செப்.23-இல் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்

DIN

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் மதுரையில் செப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது.
 இதுகுறித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி:
     மதுரை ரேஸ்கோர்ஸ் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் நடைபெறும் இப் போட்டிகள் இளையோர் (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை),  மூத்தோர் (6 முதல் 12-ஆம் வகுப்பு வரை) என இரு பிரிவுகளாக இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் வயதுச் சான்றிதழுடன், (‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.  இளையோர், மூத்தோர் பிரிவுகளில் ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை காசோலையாக வழங்கப்படும். 
 ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் இரு பிரிவுகளிலும்  தலா 3 மாணவர்கள் மற்றும் தலா 3 மாணவியர் வீதம் மொத்தம் 12 பேர் அனுமதிக்கப்படுவர்.
  மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் முதலிடம் பெறுவோர்,  மாநில அளவிலான போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT